Sunday, 13 September 2015

என் பூரண கவிதையே !!






கவிதைக்கு பாடுபொருளாய் உன்னை வைத்து, உன் பிம்பத்தை மனத்துள் நிறுத்தினேன்.
 மேகக்கூட்டங்களாய் அலைந்த அக்கண்கள் என்னை நோக்கின.
கவிதை மறந்து காதலாய் கரைந்தேன்
பின்பு நானே கவிதையாய் மாறி உன்னுள் புதைந்தேன்.
என்றேனும் உன்னுள் தளிர்த்து பூர்த்தி செய்வேனடி,
அக்காதல் கவிதையை..

Thursday, 10 September 2015

மழைப் பெண்ணே !!


முதல் துளி மழையின் ஸ்பரிசமாய் என்னுள் நுழைந்தவளே,
பின் சிறுதூறலாய் என்னுள் பரவினாயே,
சிறுமின்னலாய் கண்சிமிட்டி இதயத்துள் இடி பரவச் செய்தவளே,
பேய்மழையாய் என் காதலை பெய்வேனடி,
குடைகொண்டு மறுத்துவிடாதே,
என் இதயக்கூட்டினில் அடைக்கலம் தருவேனடி,
அதிலே நுனிப்புல்லாய் நம்காதல் தளிர்க்குமேயடி..

Monday, 7 September 2015

பகற்கனவு பழிக்காதடி


அக்கண்களை திறந்து மூடி,
சொர்கத்திற்கும் நரகத்திற்கும் அலைகலைக்கிறாய்.
பேசாமல் அக்கண்களை மூடித் தூங்கிவிடடி.
உன் கனவுகளில் நாயகனாய் வந்து,
மரம் தழைத்துப்பின் நிர்வாணமாகும்வரை காதல் செய்து,
பின் ஓர் அதிகாலைபொழுதில் உன்னை கவர்ந்து செல்வேன்.
அதுவரை, பகற்பொழுதில் தூங்கி விடாதடி
என் கனவுகளின் நாயகியே!!

பௌர்ணமிப் பறவை

அமாவாசை முடிந்தது;
மனக்கலக்கம் தெளிந்தேன்.
வளர ஆரம்பித்தது;
நடக்க ஆரம்பித்தேன்.
பௌர்ணமியை அடைய விரும்பியது;
அடைய ஆசைப்பட்டேன்.
பின்பு பறவையாய் பறக்க ஆசைப்பட்டது;
பின்பு கவர்ந்து செல்ல துடித்தேன்.
பௌர்ணமி வந்தது;
நெருங்கினேன்.
பறக்க இறக்கை வேண்டாமென யோசித்தது;
வரா வார்த்தைகளை வெளிக்கொணர முற்ப்பட்டேன்.
அமாவாசை வந்து விட்டது;
இறக்கை அடித்து என்னைவிட்டு பறப்பதாய் உணர்ந்தேன்.
அடுத்த பௌர்ணமியை எதிர்நோக்க ஆரம்பித்தது;
பிந்தொடர்ந்து பறக்க ஆரம்பித்தேன்.