Friday, 24 March 2017

கடவுளை உருவாக்குவோம் பெரியாரின் துணையோடு

கடவுளிடம் சொல்லி
வேறோர் உலகத்தை உருவாக்குவேன்..
அங்கே
மதத்தை மிதித்து,
சாதியை சாணியாக்க சொல்வேன்..
உனக்கு முன் அங்கே சென்று
உன்னை அங்கே வரவேற்பேன்..
நீ அங்கே வரும் நாளன்று,
அங்கே நான் வளர்த்த மாமரத்தில்
பிஞ்சு மாங்காய் ஒன்று காய்க்கும்..
அதன் இள புளிப்பில்
நாம் இழந்த இளமையை மீட்போம்..
ஒருவேளை  கடவுள் இல்லையெனினும்
நாமே ஓர் கடவுளை உருவாக்குவோம்..
பெரியாரின் துணையோடு..

No comments:

Post a Comment